DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
June 28, 2022,5:06:12 AM
ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு The Israel Defense Forces (IDF) கூறியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோ மையத்தில் திருநங்கைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது.
விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு, நாய்க்கன் கொட்டாய், மேட்டுப்பாளையம் என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது சாதிய ஆதிக்கம் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை எடுத்துக் காட்டிய மிகப் பெரும் கருப்பு நாளாக டிசம்பர் 25 என்ற நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிற்கிறது என்று மே 17 இயக்கத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபுவின் நினைவு திரையிடலாக அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் திரையிடப்படுகிறது.
போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பாஜகவின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
நாளை (டிசம்பர் 14) மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் சுயாதீன கலைஞர் அருண்மொழி இறுதியாக பணிபுரிந்த ஆவணப்படத்தை அவரது நினைவாகத் திரையிடுகிறோம்.
இந்துக்களாக இருக்கின்ற ஈழத்தமிழர்களைக் குடியுரிமை கொடுத்து இந்த நாட்டில் தங்க வைக்க இந்த அரசு முயலாதது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதாலா? தமிழர்களும் இசுலாமியர்களும் புறக்கணிக்கக்கூடியவர்களா? என்று நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்தும் விதமாக நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தம் மசோதாவைக் கண்டித்து எதிர்வரும் 14ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பார்ப்பன பாசிச கும்பல் வதைமுகாம்களில் அடைக்கத் திட்டமிட்டுள்ளது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் கூறியுள்ளனர்.
சென்னை மற்றும் கோவையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
நாமக்கல் மாவட்டம், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவனைக் காவல் உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது
உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் தேதி விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமா மையத்தில் `விசாரணை` திரைப்படம் திரையிடப்படுகிறது.
தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்க தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
தீண்டாமைச் சுவரை எழுப்பி 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்யவேண்டும் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கை வாசிகளான பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமம் சாத்துவதா?
Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில், எதிர்வரும் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை தமிழ் ஸ்டுடியோவில், இயக்குனர்கள் கோயன் பிரதர்சின் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு விழா தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் தலித் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.
சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் என்கிற புதிய தொடர் திரையிடல் நிகழ்வில் எதிர்வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகிறது.
மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.
மாணவி பாத்திமா லத்திபின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடி மாணவர்கள் இன்று (நவம்பர் 15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாத்திமா லத்தீப் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீர்ப்புரையின் செயலாக்கப் பகுதியில் (முடிவுரையில்), 796ஆம் பத்தியில் “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சரியாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் “நம்பிக்கையை”த்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு பெரிய சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் இராயபுரம் ஆகிய வெறும் நான்கு இடங்களில் மட்டுமே காற்று மாசை கண்காணிக்கும் அட்டோமேடிக் நிலையங்கள் இருக்கிறதாம் என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.
Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில் எதிர்வரும் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் தமிழ் ஸ்டுடியோவில் இயக்குனர் ரோபெர் ப்ரெஸ்ஸோனின் படங்கள் திரையிடப்படுகிறது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.
சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானவையே. அதனால் மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாமல், உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மதியம் 2 மணிக்கு விழுப்புரத்தில் மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது.
ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்குக் கடுமையான விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய புதிய சட்டத்தை அரசு இயற்றிட வேண்டும்.
82 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகும் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்று பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் ரீதியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் விளைவாகத் தமிழகத்தின் சமூக சீர்திருத்த வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் பாஜகவின் சித்தாந்தத்தை அடியொற்றி அரசுத்துறைகளில் நடவடிக்கைகளைக் கட்டமைப்பது, அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும் போக்ஸோ சட்டத்தையும் தமிழ்நாட்டில் சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
10ஆம் வகுப்பு முடித்தவுடனேயே ஏழை மாணவர்களைக் கல்லூரிப் படிப்பிலிருந்து மாற்றி தொழிற்கல்விக்கு அனுப்புவதையே புதிய தேசியக் கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை முற்றாகப் பறித்து கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்தும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனின் முதுகில் ஆணவ சாதியைச் சேர்ந்த மாணவன் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை, கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
இன்றளவிலும் இந்தியாவில் மலம் அள்ளுவது ஒரு சாதி பிரிவினரின் தொழிலாக இருப்பது என்பது அரச பயங்கரவாதம் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
துப்புரவு தொழில் செய்யும் தோழர்களே ஒரு நான்கு நாட்களுக்கு யாரும் எந்த வேலையும் செய்யாது பேசாமல் இருங்கள், அரசாங்கம் தானாக உங்களிடம் பேச வரும் என்று இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மோடி- ஜி ஜின்பிங் வருகையையொட்டி திபெத்திய மாணவர்களைக் கைது செய்துள்ளனர் தமிழக காவல்துறையினர். இதனைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பியூர் சினிமாவில் ஹிட்ச்காக் படங்கள் திரையிடப்படுகிறது.
தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது.
அக்டோபர் 19ஆம் தேதி சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பிலான மஞ்சள் நாடகம் சென்னையில் நடைபெறுகிறது.
தமிழரின் தொல் வரலாறு கண்டெடுக்கப்பட்ட கீழடி பகுதியை நிலத்தின் சொந்தக்காரர்களிடம் சரியான தொகையைக் கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டும் என்று தோழர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர்.
பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியோ, யாரையும் புண்படுத்தக் கூடிய செய்தியோ இல்லை. நாட்டில் அப்பாவி மக்கள் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்படுகின்றனர்.
பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்தாளர்களை மவுனமாக்கவும், சிறுமைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசு வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது பதற வைக்கிறது.
தன் மகனை விட்டு பிறிந்து செல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று பூமிகாவை மிரட்டியுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது என்று மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கல்லூரி மாணவர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது என்று ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது வெளியில் மலம் கழித்தார்கள் என்ற காரணத்துக்காகத் தலித் வகுப்பைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளை அடித்துக் கொலைசெய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டை வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதைக் கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
மோடி அரசின் மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியல் படிப்பில் திணிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில், படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.
தாராபுரத்தில் 14 வயது தலித் சிறுமி கடத்தி செல்லப்பட்டு 5 நாட்களாக வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே பணி காலியிடங்களை வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பிய தென்னக ரயில்வேவைக் கண்டித்து மே 17 இயக்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் வரலாற்றுப் பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றை மொழி இந்திதான் என்று கூறிய அமித்ஷாவின் கருத்தைக் கண்டித்து நேற்று (செப்டம்பர் 19) குடியாத்தத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.
நீதிமன்ற உத்தரவை காவல்துறையினரும், தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்துள்ளதன் விளைவே சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை ஆணவ சாதியினர் மரத்தில் கட்டி வைத்துச் செருப்பால் அடித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் இயங்கியதால் சென்னை பல்கலைக்கழக மாணவர் கிருபா மோகனை ஆளுநர் மாளிகை தந்த அழுத்தம் காரணமாகக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பட்டியலிலிருந்து வெளியேறுவது அல்ல தீர்வு. சாதியை ஒழித்துச் சாதி இழிவிலிருந்து வெளியேறுவது தான் தீர்வு என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.
நாளை (செப்டம்பர் 10) சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்தை மறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
திருநின்றவூரில், மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நடத்திய மாணவர் கிருபாமோகனை ஆளுநர் தலையிட்டு நீக்குவதா? இங்கு என்ன சர்வாதிகாரமா நடக்கிறது? என்று மே 17 இயக்கத் தோழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மோடி அரசின் சனாதன கல்விக்கொள்கையான தேசிய கல்விக்கொள்கையை முறியடிக்க ஆசிரியர் தினமான இன்று அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்போம்
தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தனது மகளின் உடலை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி சென்ற தந்தையின் நிலை பலரையும் வேதனையடைய செய்திருக்கிறது.
ஆந்திராவில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வை விநாயகர் சதுர்த்தி பந்தலுக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இயக்குநர், நடிகர் பாக்யராஜ் ”திரைக்கதை எழுதுவதை எப்படி?”என்பது குறித்த பயிற்சிப்பட்டறை நடத்துகிறார்.
என்னைச் செருப்பால் அடித்த பாஜக தொண்டர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில், கல்லூரி மாணவியைப் பேராசிரியர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதால், அந்த மாணவி வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
மதுரை அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் தடை விதித்ததால், அந்த சடலத்தைக் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
பணமதிப்பு அழிப்பு நடவடிக்கைமூலம் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ள பாஜக அரசு ரிசர்வ் வங்கியைச் சூறையாடுவதன்மூலம் திவால் நிலையை நோக்கித் தள்ளுகிறது.
ஒடுக்கப்பட்டோரின் விடிவெள்ளியாய் திகழும் அண்ணலின் சிலையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதியினரின் நோக்கமாக இருந்துள்ளது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.
காவல்நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை சில சுயநல சாதிவெறி சக்திகள் உடைப்பதும், சிலையை உடைத்து அப்புறப்படுத்தும் வரை காவல்துறை தடுத்து நிறுத்தாமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது.
சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கண்ணியமாக, பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா? என்று திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்கமுடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் இயக்குநர் மிஷ்கின் சினிமா உருவாக்கம் குறித்த மிக முக்கியமான செய்முறை பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துகிறார்.
கிருட்டிணகிரி மாவட்டத்தில், வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்று தமிழக உழவர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழினத்தை உள்ளடக்கமாகச் சொல்லி, அவற்றை மீட்பதற்கான அழுத்தங்களைப் பதித்திருக்கிற திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் இன்னமும் அதன் முழு அளவில் நிரப்பப்படுவதில்லை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பு .
சாதிவாரிக் கணக்கெடுப்பை எந்தக் காரணத்தை முன்னிட்டு தவிர்க்கக் கூடாது; சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்
எதிர்வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் `ஜீவி` திரைப்படத்தின் இயக்குனர் V.Jகோபிநாத் மற்றும் அப்படத்தில் கதை, திரைக்கதை, எழுத்து ஆகியவற்றில் பணிபுரிந்த பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது.
அரசியலமைப்புச்சட்ட உறுப்பு 370 இன் கீழ் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டது சலுகை அல்ல. அது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது ஏற்கப்பட்ட நிபந்தனை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற முறை சரியானது என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் என்பவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
June 28, 2022 - சினிமா
June 28, 2022 - சினிமா
June 28, 2022 - சினிமா
June 28, 2022 - சினிமா
June 28, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.